திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாந்திரிகம் செய்து மாடு புதைத்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டப்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாடு புதைத்ததாக கட்டிட உரிமையாளர் ராஜா முகமது நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் அழகேசன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் மூலமாக மாடு புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது. அப்போது மாட்டின் கொம்பு, கால் எலும்பு, விலா எலும்பு என அனைத்து எலும்புகளும் கைப்பற்றப்பட்டன. கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்குமார் சிப்சன் ஆகியோர் உடற்கூறு ஆய்வுக்காக மார்ட்டின் எலும்புகளை எடுத்துச் சென்றனர்.