மதுரை பரவை பகுதியில் மகனின் நினைவாக தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் வெள்ளம் வடியவில்லை என்றும் இதனால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கமல்ஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் உள்ளார் என்று கடுமையாக சாடினார்.
மேலும், கமல்ஹாசன் திமுகவிற்கு ஆதரவாக பேசினால் இனிமேல் அவர் ரசிகர்களும், விநியோகிஸ்தர்களும் அவரைவிட்டு விலகி போவார்கள் என்று பேசினார்.