சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அடுத்த வாரம் சிபிஐயிடம் புகார் அளிக்க உள்ளேன்.அதற்காக சிபிஐ அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.அதே நேரம், திமுகவைச் சார்ந்தவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தாலும் நான் பயப்பட போவதில்லை. நான் குற்றஞ்சாட்டிய நிறுவனங்கள் எதுவும் என்னுடையதல்ல என திமுகவைச் சார்ந்த எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.அதோடு, இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கின்றோம்.அதே சமயம், 100 ஆண்டு வாழப் போவதில்லை இன்றோ, நாளையோ மரணம் தழுவுவது உறுதி, எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட போவதில்லை. என்று கூறி உள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More