Mnadu News

திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையம்: முதல் அமைச்சர் திறந்து வைத்தார்.

மத்திய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை, 7 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
தற்போது, AG&P பிரதம் நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில், தமிழகத்தின் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை அமைத்துள்ளது. இந்த எரிவாயு நிலையம் 30 கோடி ரூபாய் செலவில் 1 புள்ளி 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தில் இரண்டு 56 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு கிடங்கு, ஆவியாக்கி இயந்திரம் மற்றும் உயர் அழுத்த பம்ப் அமைத்துள்ளது. இதன்மூலம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 70 பகிர்மான நிலையங்களுக்கும் மற்றும் 30,000 வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் முதல் திரவநிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை முதல அமைச்சர்; மு. க. ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்த படி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share this post with your friends