Mnadu News

திருச்சூர் பண்ணையில் பல பன்றிகள் இறப்பு! முழு விவரம் உள்ளே!

கேரளாவின் திருச்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பண்ணை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அங்கு ஒரே நேரத்தில் பல பன்றிகள் உயிர் இழந்து உள்ளன. பன்றியின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பன்றிகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், துரிதமாக செயல்பட்ட மருத்துவக் குழு பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் பண்ணைகளில் இருக்கும் பன்றிகளின் உடல் நிலையை கண்காணிக்கவும், அதில் பணிபுரிந்த நபர்களின் இரத்த மாதிரிகளை சோதனை செய்ய ஆணையிடப்பட்டது.

அதே போன்று பன்றிகள் இறந்த பண்ணையின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களில் உள்ளவர்கள் பன்றி விறக்கவும், வாங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த காய்ச்சலை பரவாமல் தடுக்க தனி மருத்துவ அறை 24 மணிநேரமும் செயல்பட உருவாக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends