Mnadu News

திருச்செந்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

திருச்செந்தூர் வட்டார கர்ப்பிணி பெண்களுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை,வளையல் உள்ளிட்ட சீதன பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

Share this post with your friends