Mnadu News

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே 1-ஆம் தேதி சாம வேத பாராயணம்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் சதுர்வேத பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக சாமவேத பாராயணம் மே மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நடக்கிறது.வேத பண்டிதர்கள் ஒவ்வொரு குழுவிலும் 13 பேர் வீதம் 6 குழுக்களாகப் பாராயணம் செய்கிறார்கள். இந்தப் பாராயணம் தினமும் காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends