Mnadu News

திரை அரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் சோழர்கள்! ஒரு வார பாக்ஸ் ஆபீஸில் இவ்வளவு கோடிகளா?

“பொன்னியின் செல்வன்” நாவல் உலக ரசிகர்களை தன்னகத்தே கொண்டது என்றால் அது மிகையாகாது. இந்த காவியத்தை படமாக்க எத்தனையோ பெரிய ஜாம்பவான்கள் முயன்று தோல்வியையே சந்தித்து உள்ளனர். ஆனால், இதை இயக்குனர் மணி ரத்தினம் தான் சாத்தியபடுத்தி உள்ளார்.

ஆம், தற்போது இப்படம் திரை அரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஷ்வர்யா ராய் ,பிரகாஷ் ராஜ், விக்ரம், ரஹ்மான், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராமன், ரியாஸ் கான், லால், நாசர், நிழல்கள் ரவி, கிஷோர் என நட்சத்திர பட்டாளத்தை அடுக்கி கொண்டே போகலாம்.

உலகமெங்கும் வெளியாகி உள்ள இப்படத்துக்கு எல்லா பக்கங்களிலும் வெற்றியே. இப்படம் வெளியாகி இன்றோடு ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் சோழர்கள் கோடியே ஓங்கி நிற்கிறது. தற்போது வரை இப்படம் 330 கோடிகளை ஈட்டி உள்ளது.

Share this post with your friends