மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே கார்கர் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் சமூக ஆர்வலர் அப்பாசாஹேப் தர்மாதிகாரிக்கு ‘மகாராஷ்டிர பூஷண் விருது’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கம் காரணமாக நீரிழப்பு போன்ற உடல்நல பிரச்னைகளால் 123 பாதிக்கப்பட்டனர். அவர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ உதவிப் பந்தல்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேல் சிகிச்சை தேவைப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று முதல் அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More