Mnadu News

திறப்பு விழாவில் குடியரசுத்தலைவருக்கு பதிலாக பிரதமர் ஏன்: பிருந்தா காரத் கேள்வி.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்,”தேசிய ஜனநாயக கூட்டணியின் அறிக்கையை நான் படித்தேன், ஆனால் அதில் முக்கியமான கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. இதுபோன்ற விழாவில் குடியரசுத் தலைவருக்கு பதிலாக பிரதமர் ஏன் இருக்கிறார்? இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பதில் சொல்லாமல் வெறும் குற்றச்சாட்டுகளை சுமத்துவது நம்பத்தகுந்ததாக இல்லை என்று நினைக்கிறேன். இதை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends