Mnadu News

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.

தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், ‘தி கேரளா ஸ்டோரி படத்தைப் பார்க்க விரும்பும் மக்களுக்கும், படத்தைத் திரையிட விரும்பும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு உடனடியாகத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சில மாநிலங்களில் திரைப்பத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். ஏனெனில் தடை விதிப்பது அந்த மாநிலத்தில் வன்முறை மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.இந்த மனு, இப்படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.

Share this post with your friends