Mnadu News

தி கேரளா ஸ்டோரி படம்: மேற்கு வங்க தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

சுதிப்தோ சென் இயக்கியுள்ள “தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் மே 5-ஆம் தேதி வெளியானது.மதமாற்றம் மற்றும் பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. இந்த நிலையில், இத்திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு மேற்குவங்க அரசின் தடைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கான தடை நீக்கக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends