தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு 9 கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் மூலம் சுமார் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா மாநகரப் பேருந்துகளில் கடந்த செப்டம்பர் வரை 173 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More