பண்டிகைகள் வரும்போதெல்லாம் பலதரப்பட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆவலோடு இருப்பார்கள். தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி என்பதால், நாளை முதலே பேருந்துகளில் கூட்டம் அலைமோதும் நிலையில், பேருந்துகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/45250366041_09726e6a7c_b.jpg)
இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்களுக்கு தினசரி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/202110071841495040_Special-bus-stand-arranged-for-Pooja-holidays-Tamil-Nadu_SECVPF.jpg)
ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்வோர் பேருந்தின் கட்டணம் பன்மடங்காக உயர்ந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். அது ₹3000 முதல் ₹4000 வரை வசூலிக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/omni-bus-2.jpg)