Mnadu News

தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் அபராதம்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோன்று ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
வாகன பந்தயங்களில் ஈடுபட்டாலோ, மாசு ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்கினாலோ 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
வாகன பர்மிட் இன்றி சென்றாலோ, தேவையின்றி ஓலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
பதிவின்றி வாகனம் இயக்கினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends