மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த 63 வயதான வைர வியாபாரி மெஹூல் சோக்சி தன் உறவினர் நிரவ் மோடியுடன் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பினார். கரீபிய தீவு நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார்.இதையடுத்து.சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பார்ப்புடா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த சூழ்நிலையில்,சோக்சி வழக்கு இந்ந நாட்டு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அவரை வலுக்கட்டாயமாக ஆன்டிகுவா மற்றும் பார்புடா தீவில் இருந்து வெளியேற்ற முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. சோக்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More