Mnadu News

தீவிரவாதத்தை எந்த காரணங்களும் நியாயப்படுத்த முடியாது: ஐ.நா. பொதுச்செயலாளர் பேச்சு.

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். லண்டனில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு அவர் மும்பை வந்தடைந்தார். மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஆண்டனியோவுக்கு அதிகாரிகள் மரியாதை அளித்தனர். அதைத் தொடர்ந்து, மும்பை தாஜ் ஓட்டலில் கடந்த 2008- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் பேசிய ஆண்டனியோ, பயங்கரவாதம் முழுமையான தீய சக்தி. எந்த காரணங்களும், சாக்குப்போக்கும், குறைகளும் ஒருபோதும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாது. இன்றைய உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. 166 பேரின் உயிரை வாங்கிய மிகவும் கொடூரமான பயங்கரவாத செயல்நடைபெற்ற இங்கு நான் மிகவும் ஆழ்ந்த உணர்வுடன் உணர்கிறேன். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் இந்த உலகத்தின் வீரர்கள். மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இந்தியர்கள், உலகின் பிற பகுதிகளை சேர்ந்த குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் முக்கியமாகும். பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது ஐநா சபையின் மைய நோக்கம்’ என்றார்.

Share this post with your friends