Mnadu News

துணை நடிகைக்கு பாலியல் தொல்லை! சிக்கிய இரண்டு நபர்கள்! நடந்தது என்ன?

சினிமா துறையில் நடிகர் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் அந்த 22 வயது இளம்பெண். இவர் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கு, வளசரவாக்கத்தில் தொலைக்காட்சி தொடர்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்து வரும் 40 வயதான காசிநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

தனக்கு நிறைய நபர்கள் தெரியும் என்றும் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரை அழைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் இது குறித்துப் பேச வேண்டும் என தனது வீட்டுக்கு இரவு நேரத்தில் வரவழைத்தார்.

இதை நம்பி அங்கு சென்ற துணை நடிகை, காசிநாதன் மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பர் பரமதாஸ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இருவரும் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதை அந்த துணை நடிகை அவரது நண்பருக்கு தெரிவிக்கவே அவர் உடனடியாக வந்து அந்த நடிகையை மீட்டார். இது குறித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அவரது நண்பர் பரமதாஸ் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Share this post with your friends