துருக்கி நாட்டு கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. அந்நிலக்கரி சுரங்கத்தில் 110 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று மாலை வழக்கம்போல வேலை செய்துகொண்டிருந்தனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/f705b445e17b2512540f6a7067008f7f_original.jpg)
யாரும் எதிர்பாராத விதமாக நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/coal-mine-1024x682.jpg)
ஆனாலும், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சுரங்கத்திற்குள் சிக்கிய எஞ்சியோரை மீட்பும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/Fierce-explosion-in-Turkey-coal-mine-kills-22-many-people.jpg)