Mnadu News

துரைமுருகனுக்கு நன்றி கூறிய பிரேமலதா விஜயகாந்த்

மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் திமுகவினருக்கும் தேமுகவினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது .மேலும் தேமுதிகாவிடம் கூட்டணி வைப்பதற்காக அதிமுக மற்றும் திமுகவினர் இருவரும் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர்.

இந்தநிலையில் திமுகவை சேர்ந்த துரைமுருகனுக்கும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்திருக்கும் கூட்டணி உடனான ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன்பின்னர் தேமுதிகவினர் அதிமுகவிடம் கூட்டணி வைத்தனர்.

இந்நிலையில் விருதுநகர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக போன்ற மெகா கூட்டணி தற்போது அமைந்துள்ளது என்றும் , மேலும் இந்த மெகா கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்த நாரதர் கழகத்தை துவக்கிவைத்த துரைமுருகனுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

Share this post with your friends