Mnadu News

துலாம் மாத பூஜை: வரும் 17-இல் சபரிமலை நடை திறப்பு.

மலையாளத்தின் துலாம் மாத பூஜைக்காக கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயில் நடை வரும் 17 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. நடை திறக்கப்பட்ட பிறகு 22 ஆம் தேதி வரை 5 நாள்கள் ஐயப்பன் கோயிலில் பூஜைகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ,இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் 15- ஆம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் மகர, மண்டல பூஜைக்கு சபரிமலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Share this post with your friends