Mnadu News

தூத்துக்குடியில் கனிமொழியே நின்றாலும் அதிமுக வெல்லும்

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பர்
துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை
வழங்கி கௌரவித்தார்.

பட்டமளிப்புக்கு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ
தம்பிதுரை பலநேரங்களில் தெரிவிக்கும் கருத்துகள் அவரது சொந்தக் கருத்தாகவே பார்க்க
வேண்டும். அதிமுக ஜனநாயகக் கட்சி எனவும் இங்கு அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும்
உரிமை அனைவருக்கும் இருப்பது போல தம்பிதுரைக்கும் இருக்கிறது எனக் கருத்து
தெரிவித்தார். ஆனால் கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர், இணை
ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுகவின் பொறுப்பாளர்கள் கூடி முடிவெடுத்து
அறிவிப்பார்கள்.

தூத்துக்குடி நாடளுமன்றத் தொகுதியில் கனிமொழி உட்பட யார் எதிர்த்து நின்றாலும்
அதிமுக தலைமை அறிவிக்கிற வேட்பாளர் தான் வெற்றி பெறுவார். கடந்து நாடாளுமன்றத்
தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற எங்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியம்
இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends