தூத்துக்குடி மாவட்டம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கனி – அந்தோணியம்மாள் தம்பதி. இவரது கணவரும் மகா இறந்துவிட்ட நிலையில், 68 வயது மூதாட்டியான அந்தோணியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/08/POLICE-NEW.jpg)
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வடபாகம் காவல்துறையினர் மூதாட்டி அந்தோணியம்மாள் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். அதோடு, அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளை போனதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அந்தோணி அம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/08/death-1.jpg)
இந்நிலையில் இன்று தடவியல் காவல்துறையினர் அந்தோணியம்மாள் வீட்டில் சோதனை செய்யும் போது வீட்டிற்கு வெளியே பித்தளை தோடுகளை அந்த கும்பல் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அந்தோணியம்மாள் வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை கஞ்சா போதை கும்பல் அவரது வீட்டில் இருந்து 5 பவுன் நகை மற்றும் பொருட்களை திருடியதுடன் அவரது வீட்டின் உள்ளே புகுந்து மது குடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/08/theives-1.webp)
இந்த நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே அந்தோணியம்மாள் புகார் அளித்த நிலையில், அது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காததே மூதாட்டியின் உயிர் இழப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/08/murder-1-3-1024x683.jpg)