Mnadu News

தேசிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கிறார் சந்திரசேகர் ராவ்.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதையடுத்து தேசிய அரசியலில் நுழைவது குறித்து தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கடந்த ஜூன் மாதம் முதலே சந்திரசேகர் ராவ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை மாற்றவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், தசரா விழாவான நாளை தனது தேசிய கட்சியின் பெயரை சந்திரசேகர் ராவ் வெளியிடவுள்ளதாகவும், வரும் 9-ஆம் தேதி டெல்லியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends