ஓசூர் அருகே கோவிலில் பொங்கல் வைத்தபோது தேனீக்கள் கொட்டியதில் 11 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கதிரேப்பள்ளியை சேர்ந்த சின்னம்மா(60) என்பவரது குடும்பத்தினர் 6 பேர் வேண்டுதலுக்காக கிராமத்திற்கு அருகே உள்ள முனீஸ்வரன் கோவிலில் வழிபட்டு, தீ மூட்டி பொங்கல் வைத்துள்ளனர். அப்போது அருகே ஆலமரத்தில் இருந்த தேனீக்கள் கோவிலில் இருந்தவர்களை கொட்டியதில் 11 மாத கைக்குழந்தை, இரண்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் முகம், கை கால் வீங்கிய நிலையில் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.