Mnadu News

தேர்தல் அறிக்கையில் எழுத்துப்பிழை

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது. அதன் பின்னர் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது.

அறிக்கைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் திமுகவின் தேர்தல் அறிக்கையை கடுமையாக தாக்கிப் பேசினார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை உயர்த்திப் பிடித்துப் பேசினார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அமைதி வளம் வளர்ச்சி எனத் தமிழில் குறிப்பிட்ட தேர்தல் அறிக்கையில் அதனை ஆங்கிலத்திலும் குறிப்பிட்டனர். இதில் அமைதிக்கு pease என்று அச்சிட்டு நெட்டிசன்களின் வசைப் பேச்சுக்கு உள்ளாகியுள்ளனர் அதிமுகவினர்.

 

Share this post with your friends