Mnadu News

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், கன்னியாகுமரியில் அ.தி.மு.க. வேட்பாளரையும் பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 4-ம் இடத்தையே பிடித்துள்ளது. கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இம்முறை மைக் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 8.19% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளைப் பெற்றுள்ளது.

வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இரு கட்சிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதை தேர்தல் ஆணையம் உறுதி செய்து 15 நாட்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

Share this post with your friends