Mnadu News

தேர்தல் ஆணையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு புகார்

விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். அனைத்து வேட்பாளர்களும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்றபோது விஜயபிரபாகரன் 4,000 வாக்கு வித்தியாசத்தில் தான் தோற்றார். தோல்வியை முழு மனதாக ஏற்கிறோம்; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக பிரேமலதா கூறியுள்ளார்.

Share this post with your friends