Mnadu News

தேர்தல் காரணமாக 2000 ரூபாய் வழங்கும் திட்டம் நிறுத்திவைப்பு ;

தேர்தல் காரணமாக ஏழை எளிய விவசாயிகள் ,சிறு தொழிலாளிகளுக்காக சிறப்பு நிதி தொகையான 2000 ரூபாய் வழங்கும் கணக்கெடுப்பு பணியை தமிழக அரசு நிறுத்திவைத்துள்ளது .மக்களவை தேர்தல் வர இருப்பதால் இந்த தொகையை வழங்க இருக்கும் கணக்கெடுப்பு பணிகளை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த 2000 ரூபாய் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் சார்பில் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது .

Share this post with your friends