கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 250 – க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தினக்கூலியாக அவர்களுக்கு ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்த 606 ரூபாயினை வழங்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பொள்ளாச்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
. அம்மனுவில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.