Mnadu News

தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட பெண் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சுண்டட்டி கிராமத்தில் தனது தோட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்த யசோதா என்ற பெண் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சுமார் மூன்று கிலோ மதிப்புள்ள கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி சிவலிங்கம், இது போன்று தமிழகத்தில் முற்றிலுமாக கஞ்சாவை ஒழிக்கும் விதமாக தேர்தல் வேட்டையும் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Share this post with your friends