இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் 42 வயதான பெனலோப் வில்லியம்ஸ். இவர் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருடன் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/nurse.jpg)
மேலும் அந்த சிகிச்சை பெற்றுவரும் நோயாளியுடன், மருத்துவமனையின் பின்புறம் கார் பார்க்கிங் பகுதியில், கார் ஒன்றில் பாலியல் உறவு வைத்து கொண்டதில் அந்த நோயாளி உயிரிழந்து விட்டார் என்ற குற்றச்சாட்டால் வில்லியம்சியை அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/IMG_20230711_135357.jpg)
விசாரணையில், அந்த நோயாளி முகநூல் வழியே உடல்நல பாதிப்பு என செய்தி அனுப்பினார். அதன் பின்னரே அவரை பார்க்க சென்றேன். காரின் பின்புறம் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே செலவிட்டேன். நாங்கள் வெறும் பேசி கொண்டு இருந்தோம் என முதலில் கூறியுள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/patient.jpg)
ஆனால் போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில், அந்த நபருடன் இருந்த உறவு பற்றி அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். பாலியல் உறவில் ஈடுபட்ட போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என கூறப்படுகிறது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/cop.jpg)
மேலும், இந்த உறவு பற்றி அறிந்த சக ஊழியர்கள் வில்லியம்ஸ்ஸை முன்னமே எச்சரித்து உள்ளனர். ஆனால், அவர் செவி சாய்க்காமல் இருந்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/hospital.jpg)