Mnadu News

நர்ஸ் – நோயாளி இடையே பாலியல் உறவு! நோயாளி பலி! நடந்தது என்ன? 

இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் 42 வயதான பெனலோப் வில்லியம்ஸ். இவர் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருடன் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளார். 

மேலும் அந்த சிகிச்சை பெற்றுவரும் நோயாளியுடன், மருத்துவமனையின் பின்புறம் கார் பார்க்கிங் பகுதியில், கார் ஒன்றில் பாலியல் உறவு வைத்து கொண்டதில் அந்த நோயாளி உயிரிழந்து விட்டார் என்ற குற்றச்சாட்டால் வில்லியம்சியை அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த நோயாளி முகநூல் வழியே உடல்நல பாதிப்பு என செய்தி அனுப்பினார். அதன் பின்னரே அவரை பார்க்க சென்றேன். காரின் பின்புறம் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே செலவிட்டேன். நாங்கள் வெறும் பேசி கொண்டு இருந்தோம் என முதலில் கூறியுள்ளார்.

ஆனால் போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில், அந்த நபருடன் இருந்த உறவு பற்றி அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். பாலியல் உறவில் ஈடுபட்ட போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என கூறப்படுகிறது. 

மேலும், இந்த உறவு பற்றி அறிந்த சக ஊழியர்கள் வில்லியம்ஸ்ஸை முன்னமே எச்சரித்து உள்ளனர். ஆனால், அவர் செவி சாய்க்காமல் இருந்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends