Mnadu News

நாங்கள் 5ஜி கொண்டு வந்தோம், அவர்கள் 2ஜி-யில் ஊழல் செய்தார்கள்; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்பு பேச தொடங்கிய பிரதமர், என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:- தமிழக மண்ணில் நான் ஒரு மாபெரும் மாற்றத்தை காண்கிறேன். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கர்வத்தை தமிழகம் அடக்கும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக எப்போதும் மாற்றாது.

மக்களை கொள்ளையடிக்கவே இவர்கள் ஆட்சியமைக்க நினைக்கிறார்கள். நாங்கள் 5ஜி கொண்டு வந்தோம். அவர்கள் 2ஜியில் ஊழல் செய்தார்கள். இந்தியா கூட்டணி ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்தார்கள். இந்தியா கூட்டணியின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது. பா.ஜ.க அரசு ஏராளமான விமான நிலையங்களை கட்டியது. கன்னியாகுமரி பா.ஜ.க.வுக்கு எப்போதும் மாபெரும் ஆதரவு தந்திருக்கிறது என தெரிவித்தார்.

Share this post with your friends