Mnadu News

“நாடாளுமன்ற தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன்” – சசி தரூர்

இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக, நாடாளுமன்ற தேர்தலில் இனி போட்டியிடப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதையடுத்து 4-வது முறையாக திருவனந்தபுரம் தொகுதியில், மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 16 ஆயிரத்து 77 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ‘சசி தரூர்’ , “நாடாளுமன்றத்தில் இதுவரை தன்னால் முடிந்த அளவுக்கு பணியை சிறப்பாக செய்துள்ளேன் என்று நினைப்பதாக கருத்து தெரிவித்தார். மேலும் 5 ஆண்டுகளுக்கு பிறகோ அல்லது 5 ஆண்டுகளுக்குள்ளாகவோ நாடாளுமன்ற தேர்தல் வந்தால் அதில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ள்ளதாகவும், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதை நேர்மையாக உணர்கிறேன். அப்போதுதான் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச முடியும். என்று கூறிய சசி தரூர் அதன் பிறகும் தனது மக்கள் பணி தொடரும் அதை தேர்தல் அரசியல் இல்லாமலேயே செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends