Mnadu News

நாட்டின் கண்ணியத்திற்கு எதிரான ஒவ்வோர் அடிக்கும் பதிலடி தரப்படும்: ராஜ்நாத் சிங் பேச்சு.

தேசிய தொழில்நுட்ப தினம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா தனக்கான அமைதியை விரும்புவது மட்டுமின்றி, உலகிற்கும் ஒரு செய்தியை தெரிவித்து உள்ளது. தொலைநோக்கு பார்வையாளர்களான கடவுள் புத்தர் மற்றும் தேச தந்தை மகாத்மா காந்தி ஆகியோர் உலகத்திற்கு இந்தியா அளித்த பரிசு ஆகும். நாங்கள் ஒருபோதும் எந்தவொரு நாட்டின் மீதும் படையெடுத்தது கிடையாது. அடிமைப்படுத்தியதும் இல்லை. ஆனால், 1998-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, இந்தியா, வசுதேவ குடும்பம் மற்றும் அகிம்ச பரமோ தர்மம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட அமைதி விரும்பும் ஒரு நாடு. எனினும், தனது இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கு யாரையும் தீங்கு செய்ய அனுமதிக்காது. நாட்டின் கண்ணியத்திற்கு எதிரான ஒவ்வோர் அடிக்கும், பதிலடி தரப்படும் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends