Mnadu News

“நாட்டில் எங்கும் மோடி அலை வீசவில்லை” – டி.கே.சிவக்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற போவதாக பா.ஜ.க. பொய் பிரசாரம் செய்துவருகிறது என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தெரிவித்த அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற போவதாக பா.ஜ.க. பொய் பிரசாரம் செய்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மேலிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி அவர்களுக்கு 250 இடங்கள் கூட கிடைக்காது என தெரியவந்துள்ளதாக கூறினார்.

இதன் காரணமாகவே சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகம் ஆகியவற்றை பா.ஜ.க. தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக குற்றம் சாட்டிய சிவகுமார், நாட்டில் எங்கும் மோடி அலை வீசவில்லை. அதிலும் கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என்று கருத்து தெரிவித்தார்.

Share this post with your friends