Mnadu News

நாட்டில் குறையும் கொரோனா பாதிப்பு.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 892 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் விகிதம் 98 புள்ளி 77 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும், நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நேற்று ஒரேநாளில் மட்டும் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 555 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Share this post with your friends