Mnadu News

நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 26,618 ஆகக் குறைவு.

கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினமும் வெளியிட்டு வருகிறது.அதன் படி,, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 430 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதோடு, தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 618 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் விகிதம் 98 புள்ளி 76 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நேற்று ஒரேநாளில் மட்டும் 5 லட்சத்து 82 ஆயிரத்து 727 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends