Mnadu News

நாட்டில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.

கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு விவரத்தில்,
நாட்டில் ஒரு நாளில் புதிதாக ஆயிரத்து 946 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 34 ஆயிரத்து 376 ஆக உள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 417 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின்; விகிதம் 98 புள்ளி 76 ஆக அதிகரித்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நேற்று ஒரேநாளில் மட்டும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 787 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends