நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 63 ஆயிரத்து 968 ஆக உள்ளது.
நாட்டில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 20 ஆயிரத்து 267ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13ஆயிரத்து 187 ஆகக் குறைந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நேற்று ஒரேநாளில் மட்டும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 767 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More