Mnadu News

நாட்டில் புதிதாக 2,208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 49 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 619 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98 புள்ளி 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நேற்று ஒரேநாளில் மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 714 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Share this post with your friends