Mnadu News

நாட்டில் புதிதாக 2,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 14 ஆயிரத்து 437 ஆக உள்ளது.
அதோடு, தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 79 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்; 2, ஆயிரத்து 923 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை விகிதம் 98 புள்ளி 75 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends