Mnadu News

நாட்டில் புதிதாக 2,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 21 ஆயிரத்து 319 ஆக உள்ளது. அதோடு, தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 509 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 557 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை விகிதம் 98 புள்ளி 76 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends