Mnadu News

நாட்டில் புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில்; புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு அதாவது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் பதிவாகும் மிகக் குறைவான கொரோனா தொற்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 67 ஆயிரத்து 398 ஆக உள்ளது.
அதேவேளையில், நாட்டில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7ஆயிரத்து 918 ஆகக் குறைந்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Share this post with your friends