Mnadu News

நாட்டு மக்கள் மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர் – மல்லிகார்ஜுன கார்கே

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இதுவரை 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டு மக்கள் மாற்றத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2004 தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்தை எழுப்பி தோல்வியை தழுவியது. அதே போன்ற நிலை தற்போதைய பா.ஜ.க. அரசுக்கும் ஏற்படும் என்று தெரிவித்தார்.

நமது காலத்தில் இவ்வளவு பெரிய யாத்திரைகளை யாரும் மேற்கொண்டதில்லை. ராகுல் காந்தி மேற்கொண்ட இரண்டு யாத்திரைகளால் மக்களின் பிரச்சினைகளை தேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.” என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Share this post with your friends