Mnadu News

நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்.

பராமரிப்புப் பணி காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படும். நாளை ஆயுத பூஜை விடுமுறை என்பதால் பொதுமக்கள் வருகை தரும்பொருட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு நாளை அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends