Mnadu News

நீதிமன்ற தீர்ப்பை பேரவைத் தலைவர் மதிக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு.

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. அரசியல் ரீதியாக எதிர்கொள்ள அஞ்சி கொல்லைப்புறமாக திமுக தலைவர் எங்களை பழிவாங்குகிறார்.
ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்ற தீர்ப்பே உள்ள நிலையில் அதை சட்டப்பேரவைத் தலைவர் மதிக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டப்பேரவை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம்.
திமுகவின் ஆதரவுடன் பன்னீர் செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன. 62 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதய குமாரை தேந்தெடுத்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Share this post with your friends