Mnadu News

நுரையீரல் தொற்று: டெல்லி எய்ம்ஸில் நேபாள அதிபர் ராம் சந்திர பௌதல் அனுமதி.

கடந்த மாதம் நேபாள அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட நேபாள காங்கிரஸின் மூத்த தலைவர் ராம் சந்திர பௌதல், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டதை உறுதி செயதனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேபாள அதிபர் ராம் சந்திர பௌதல் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share this post with your friends