Mnadu News

நூதன முறையில் 2.4 கிலோ ஹெராயின் கடத்தல்: உகாண்டா நபர் கைது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவர் போதை பொருளை கடத்தி வருவதாக தகவல் கிடைத்து. இதனை தொடர்ந்து, உகாண்டா நாட்டின் என்டெப்பே நகரை சேர்ந்த வெளிநாட்டு பயணி ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணையின முடிவில், காலி பெட்டியின்; அட்டைக்குள் போதை பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அட்டைக்குள் இருந்த 2 கிலோ 400 கிராம் எடை கொண்ட 16 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர்,அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends