Mnadu News

பச்சை நிறமாக மாறிய கடல்; அச்சத்தில் மீனவர்கள்..!

தூத்துக்குடி துறைமுக கடற்கரை பூங்கா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மூலமாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துறைமுக பூங்கா பகுதியில் noctiluca நோக்டிலுக்கா என்ற வகை கடல்பாசி அதிகமாக அளவில் கடலில் கலந்ததையடுத்து கடல் பச்சை நிறத்தில் காட்சியளித்தது. இதுபோன்று கடல் பச்சை நிறமாக மாறினால் மீன்கள் உயிரிழந்து விடும் என்று மீனவர்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே இந்த பச்சை நிற கடல் நீரை மத்திய அரசின் கடல் ஆராய்ச்சி மையம் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends